ஒருங்குறி தமிழில் கிரந்தம் திணிப்பு கேடு நல்கும்


“தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு மியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற் கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்.. . . . தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த மொழி கேள்விக்கின்பம் பயக்கு மென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச மொழி யொன்று வகுக்குமாறு தூண்டிற்று.” என்று பரிதிமாற்கலைஞர் எழுதுவார்.

“பாரதி – பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் குறியீடுகள் உருவாக்க வேண்டும் என்று 1916–இல் ஞானபானு இதழில் “தமிழில் எழுத்துக்குறை” என்றத் தலைப்பில் எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும், அன்போடு உறவுமுறையில் “மாமா” என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக்கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார்.

ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும். வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின. இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டா.

(தமிழ் ஒருங்குறியில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்)

கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று 'சிலர்' முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் - தமிழின் ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில் தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 ( ஜ,ஷ, , ஹ, க்‌ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளியிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமண மதத்தினராலும் ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து, மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எங்களின் கருத்து.

உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாது என செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும்...

எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.

1)கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை இன்றி இயங்கும்.

2)ஐந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் குறியீடுகளை (IPA - International Phonetic alphabets) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்?

3)இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் முதலியன ...தமிழ் எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.

4)கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய் சீர்குலைப்புக்கு ஏதாகும் .

இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும், கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

எழுத்தாக்கம்:-
முனைவர் பா.இறையரசன்
Dr.B.ERAIYARASAN,M.A.,M.Phil.,Ph.D

4 கருத்துகள்:

nerkuppai thumbi சொன்னது…

வட மொழி ஒலிகளைக் குறிக்க தமிழில் புகுத்தப்பட்ட ஜ, , ஷ, ஸ, ஹ, க்ஷ, குறித்து பதிவு இட்டுள்ளீர்கள்.
நாம் அறிந்த வரையில் உலகில் அதிகமாக ஒலிக்கும் மொழிகளில் வேற்று மொழி ஒலிகளைக் குறிக்க புதிதாக எழுத்துக்கள் சேர்க்க வில்லையே; தமிழில் என் சேர்க்க வேண்டும் என்பதே சாரம்.
உண்மை தான்.
தமிழில் சாதாரணமாக நாம் புழங்கும் ஒலிகளை தமிழில் எழுதிக் காட்ட முயல வேண்டும். உலகம் எங்கும் அதிகமாகப் பேசப்படும், அறியப்படும் ஆங்கிலத்தில் spelling வேறாகவும், pronunciation வேறாகவும் காட்டப் படுவது நாம் அறிவோம். அதாவது வேற்று மொழிச் சொற்களை புழங்க விட்டால், அவற்றை சரியான ஒலியுடன் உள்வாங்குவது நலம் பயக்கும் என்பது அதன் அடிப்படை. தமிழர்களைப் பொறுத்தவரை எழுதுவதே ஒலி என்ற இந்திய அணுகுமுறையில் வேறு மொழிகளில் இருந்து வந்து விட்ட- , வந்து கொண்டு இருக்கும் - சொற்களை ஒலிக்குறியீடு இட்டு (ஆங்கிலத்தில் உள்ளது போல்) காட்டும் முறை உருவாக்க வேண்டும்.
இரண்டு முக்கிய காரணங்களால் வேற்று மொழி சொற்கள் தமிழில் வருவதை தடுத்தல் கடினம்.

ஒன்று: உலகமயமாக்கல்; வேறு மொழி வினைச்சொற்களை தமிழ் படுத்த முடிந்தாலும், பெயர்கள், நாடுகள், அவற்றில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பெயரை தமிழர் சரியாக உச்சரித்தல் அவசியம். அதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளின், மொழிகளின் ஒலிக்குறியீடுகளை இறக்குமதி செய்யச் சொல்லவில்லை; ஜ, ஸ, ஷ,ஹ, முதலிய ஒலிகள் அதிகம் தேவைப் படுவது நாம் அறிந்ததே

. இன்னொன்று: தமிழகம் நாம் விரும்பியோ, விரும்பாமாலோ, இந்தியாவின் பகுதி ஆகிவிட்டது; அந்த இந்தியாவில் வட மொழிகளிலிருந்து பிறந்த மொழிகள், அவற்றை பேசுபவர் அதிகம். ஆகவே, அவற்றிலிருந்து இங்கு வந்து கழுத்தை அறுக்கும் சொற்கள் (விஷயம், பாவம்(bhaavam), முதலியன ) தவிரவும், மனிதர்கள், இடங்களின் பெயர்கள். தமிழகத்திற்கு வெளியே பணி நிமித்தம் வருபவர்கள் தங்கள் உச்சரிப்பினால் எவ்வளவு கேலிக்கு உள்ளாகிறார்கள் என அவர்களே சொல்ல முடியும். தமிழகத்திலேயே உள்ள கிணற்றுத் தவளைகள் இதை புரிந்து கொள்ளவே முடியாது.

சொல்ல விழைவது : தமிழர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்தி, உச்சரிப்புக் குறியீடு உருவாக்கினால் இது போல வட மொழி ஒலிகளுக்காகஅந்நிய எழுத்துக்கள் வேண்டாம்.

நெற்குப்பை.தும்பி

nerkuppai thumbi சொன்னது…

வட மொழி ஒலிகளைக் குறிக்க தமிழில் புகுத்தப்பட்ட ஜ, , ஷ, ஸ, ஹ, க்ஷ, குறித்து பதிவு இட்டுள்ளீர்கள்.
நாம் அறிந்த வரையில் உலகில் அதிகமாக ஒலிக்கும் மொழிகளில் வேற்று மொழி ஒலிகளைக் குறிக்க புதிதாக எழுத்துக்கள் சேர்க்க வில்லையே; தமிழில் என் சேர்க்க வேண்டும் என்பதே சாரம்.
உண்மை தான்.

nerkuppai thumbi சொன்னது…

தமிழில் சாதாரணமாக நாம் புழங்கும் ஒலிகளை தமிழில் எழுதிக் காட்ட முயல வேண்டும். உலகம் எங்கும் அதிகமாகப் பேசப்படும், அறியப்படும் ஆங்கிலத்தில் spelling வேறாகவும், pronunciation வேறாகவும் காட்டப் படுவது நாம் அறிவோம். அதாவது வேற்று மொழிச் சொற்களை புழங்க விட்டால், அவற்றை சரியான ஒலியுடன் உள்வாங்குவது நலம் பயக்கும் என்பது அதன் அடிப்படை. தமிழர்களைப் பொறுத்தவரை எழுதுவதே ஒலி என்ற இந்திய அணுகுமுறையில் வேறு மொழிகளில் இருந்து வந்து விட்ட- , வந்து கொண்டு இருக்கும் - சொற்களை ஒலிக்குறியீடு இட்டு (ஆங்கிலத்தில் உள்ளது போல்) காட்டும் முறை உருவாக்க வேண்டும்.
இரண்டு முக்கிய காரணங்களால் வேற்று மொழி சொற்கள் தமிழில் வருவதை தடுத்தல் கடினம்.

nerkuppai thumbi சொன்னது…

ஒன்று: உலகமயமாக்கல்; வேறு மொழி வினைச்சொற்களை தமிழ் படுத்த முடிந்தாலும், பெயர்கள், நாடுகள், அவற்றில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பெயரை தமிழர் சரியாக உச்சரித்தல் அவசியம். அதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளின், மொழிகளின் ஒலிக்குறியீடுகளை இறக்குமதி செய்யச் சொல்லவில்லை; ஜ, ஸ, ஷ,ஹ, முதலிய ஒலிகள் அதிகம் தேவைப் படுவது நாம் அறிந்ததே

. இன்னொன்று: தமிழகம் நாம் விரும்பியோ, விரும்பாமாலோ, இந்தியாவின் பகுதி ஆகிவிட்டது; அந்த இந்தியாவில் வட மொழிகளிலிருந்து பிறந்த மொழிகள், அவற்றை பேசுபவர் அதிகம். ஆகவே, அவற்றின் வந்து இங்கு வந்து கழுத்தை அறுக்கும் சொற்கள் (விஷயம், பாவம்(bhaavam), முதலியன ) தவிரவும், மனிதர்கள், இடங்களின் பெயர்கள். தமிழகத்திற்கு வெளியே பணி நிமித்தம் வருபவர்கள் தங்கள் உச்சரிப்பினால் எவ்வளவு கேலிக்கு உள்ளாகிறார்கள் என அவர்களே சொல்ல முடியும். தமிழகத்திலேயே உள்ள கிணற்றுத் தவளைகள் இதை புரிந்து கொள்ளவே முடியாது.

சொல்ல விழைவது : தமிழர்கள் உச்சரிப்பில் கவனம் செலுத்தி, உச்சரிப்புக் குறியீடு உருவாக்கினால் இது போல வட மொழி ஒலிகளுக்காகஅந்நிய எழுத்துக்கள் வேண்டாம்.