கிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு



யூனிகோட் எனப்படும் உலக மொழிகளை கணினி மற்றும் இணைய பயன்பாட்டுக்கு ஏற்ப பொது ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் ஒருங்குறி சேர்த்தியம், கிரந்த எழுத்துக்களுக் குள் ஏழு தமிழ் எழுத்துக்களை இணைக்கும் தனது முடிவை ஒத்திவைத்துள்ளது.


இது தொடர்பாக அமெரிக்காவில் இருக்கும் ஒருங்குறி சேர்த்தியத்தின் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி எட்டாம் தேதி நடந்த உயர்மட்ட நுட்பக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து இந்திய நடுவணரசும் தமிழக அரசும் ஆராய்ந்துவருவதால் இது குறித்து தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று ஒருங்குறி சேத்தியம் முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து தமிழக அரசுடன் கலந்துபேசி, இந்திய நடுவணரசு தனது இறுதி முடிவை தெரிவிக்கும்படியும் ஒருங்குறி சேர்த்தியம் கோரியுள்ளது.

உத்தமம் எனப்படும் உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் கிரந்த எழுத்துமுறையில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கலாமா கூடாதா என்று ஆராய்ந்த பணிக்குழுவின் தலைவர் மணி மு மணிவண்ணன் அவர்கள், இந்த ஒருங்குறி சேர்த்தியத்தின் உயர்மட்ட நுட்பக்குழுவில் நேரில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டம் குறித்து அவர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.









தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்த கிரந்த எழுத்துமுறையை ஒருங்குறிக்குள் கொண்டுவந்து மற்றமொழிகளைப்போல அதற்கும் தனி இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிற பரிந்துரை ஒருங்குறி சேர்த்தியத்திடம் வைக்கப்பட்டது.

அப்படி செய்யும்போது கிரந்த எழுத்துக்களுடன், கிரந்த எழுத்துமுறை சாராத தமிழ் எழுத்துக்கள் ஏழையும் அதில் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த ஏழு எழுத்துக்களை சேர்த்தால் தான் தமிழ் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த பெயர்கள் மற்றும் சொற்களை சரியாக எழுதமுடியும், வாசிக்க முடியும் என்கிற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் பழங்கால ஆவணங்களை அவற்றில் உள்ளபடியே கணினி தொழில்நுட்பத்தில் ஆவணப்படுத்தவேண்டுமானால் இந்த எழுத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் வாதாடப்பட்டது.

ஆனால், தமிழ் நாட்டிலும், உலக அளவிலான தமிழ் மொழி அறிஞர்கள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கிரந்த எழுத்துமுறையை சாராத ஏழு தமிழ் எழுத்துக்களை அதில் சேர்ப்பது தமிழ் கணினி மற்றும் இணைய பயன்பாட்டில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்து இயங்கிவந்திருக்கும் தமிழ் எழுத்துமுறை, எதிர்காலத்தில் கலப்பு எழுத்துமுறையாக மாறுவதற்கு இது வழிகோலும் என்றும் இவர்கள் வாதிட்டனர்.

தமிழ் மொழி அறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இதுகுறித்து ஆராய உயர்மட்டக்குழுவை நியமித்தது. இந்த குழுவின் பரிந்துரை கிடைக்கும் வரை இதுகுறித்து இறுதி முடிவு எதனையும் ஒருங்குறி சேர்த்தியம் எடுக்கக்கூடாது என்று இந்திய நடுவணரசிடம் கோரியது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற இந்திய நடுவணரசு, ஒருங்குறி சேர்த்தியத்திடம் தனது முடிவை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டது.

ஒருங்குறி சேர்த்தியத்தின் உயர்நுட்பக்குழுவும் அதன்படி தனது முடிவை ஒத்திவைத்தது.

தமிழ் எழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்



ஒருங்குறி என்றால் என்ன? அதில் தமிழெழுத்துக்களும் மற்றவையும் எங்குள்ளன? இப்பொழுது தமிழெழுத்தை நீட்டிக்கச் சொல்லி முன்மொழிவு வந்திருக்கிறதே? இது எதற்காகச் செய்யப்படுகிறது? எங்கு இது வரக்கூடும்? வந்திருப்பது நல்லதா? கெட்டதா?


இதேபோலக் கிரந்தத்திற்கான முன்மொழிவை யார் செய்கிறார்கள்? அம் முன்மொழிவு என்ன? அது தமிழெழுத்தைத் தாக்குமா? தாக்காதா? அந்தத் தாக்கம் இல்லாது, கிரந்தத்தை மட்டுமே முன்மொழிய முடியாதா?

இப்படிப் பல்வேறு கேள்விகளை விவரந் தெரிந்தவரிடம் கேட்டுத் தெளிந்து அவற்றிற்கு விடை கண்டு, வெற்றிபெறத் தக்க தடந்தகையை உருவாக்காது, போராடப் போனால் விளைவு என்ன? இன்னொரு முள்ளிவாய்க்காலா? அது தேவையா?
  • “ஆகா.., எம் அன்னைக்குக் கேடுற்றதே! இதை வீணே பார்த்திருக்க முடியுமா? மறத்தமிழன் போருக்கு அஞ்சுவானா? ஓடிவாருங்கள் தோழர்களே! அன்னையைக் காப்போம்” என்று கூவியழைத்து மானகக் கவணுக்கு (machine gun - இயந்திரத் துப்பாக்கி) முன்னால் அணிவகுத்து நிற்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?



முழுக் கட்டுரை:-

1.தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1

2.தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

  • நன்றி: வளவு வலைப்பதிவு

கிரந்தம் வடிவில் வரும் எமன்

இது 'தமிழக அரசியல்' இதழில் வெளிவந்த கட்டுரை. அன்பர்கள் வாசிப்புக்கு இங்கு அப்படியே தருகின்றேன். -தமிழ் ஊழியன்


கிரந்தம் வடிவில் வரும் எமன்:
தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா?



‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டு முறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange)அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்.

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010இல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில் க1 க2 க3 க4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division) இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?

எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் ஒருங்குறி கலந்துரையாடல்


ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - கருத்தரங்கம்


பேரன்புடையீர், வணக்கம்.

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. இதில் பங்கேற்க,

"ஒருங்குறியில் தமிழ்க்காப்பு"

என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே,


மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.


தொடர்பிற்கான பேசி எண்கள்:
98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்)


கெடல்எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க! - பாவேந்தர் பாரதிதாசன்


இவ்வண்ணம்,
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்.

Grantha Philosophy in Tamil Would Be a Dangerous Trend


Grantha script and it's associated scripts are not based on scientific analysis, rather they are based on hear-say additions. As the Grantha script was built on a random hear-say knowledge, it's ability to scientifically scale is very limited.

So expanding Grantha in a non scalable and non-structured manner to write certain Tamil passages is a very dangerous trend. As the random based script and it's associated scripts has a wide user base (population) this can lead to the dismantling of scientifically defined Tamil alphabet system, which is scalable and structured.

The scalable nature of the definition of Tamil alphabet, that of names of the places of articulation, gives rise to large number of phonemes in day to day usage of spoken Tamil. The number of phonemes used in Tamil is largest for any language in the world and the definition of alphabet in Tamil is based on scientific philosophy and different to any other language in the world.

Scientifically analysed, philosophy used in Tamil alphabet is the only correct approach. however, due to usage numeracy reason there is a danger that this foundation of all languages might be lost for ever by introducing random based system to replace Tamil methodology.

In another front, any attempt to expand the Tamil script base has to be done again on a scientific basis and on an scalable basis. Random, hear-say approaches should not be allowed to modify Tamil. (An example of expansion would be creating scalable diacritics to indicate the numerous phonemes for pronunciation dictionary. The diacritics must be defined structurally. Numerous vowel phonemes including half, full and in between vowels, all consonantal phonemes possible at of each of the places of articulations, definitions for (aytham) different types of modulations, such as aspirations need to be structurally defined. The theory of minimal number of alphabet to clearly describes all possible phonemes and modulations must be adhered to.)

In essence, using Grantha philosophy in Tamil would be a dangerous trend that can destroy the only surviving alphabet system that is scientifically accurate.

Kind Regards,
Sinnathurai
tamil_araichchi@googlegroups.com.

முதல்வர் கலைஞருக்கு மலேசியாவிலிருந்து நன்றியும் பாராட்டும்

ஒருங்குறி தமிழில் கிரந்தம் திணிப்பை தடுத்து நிறுத்தக் கோரி இந்திய நடுவண் அரசுக்கு அவசர மடல் எழுதிய தமிழ்க முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்களின் நன்றியும் பாராட்டும். மலேசிய நாளிதழ் (மக்கள் ஓசை 10.11.2010) செய்தி.