கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: மே16, புதுச்சேரி



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.


நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,
உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
திரு.விருபா. குமரேசன் சென்னை
திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,


அனைவரையும் வருக என வரவேற்கும்:-
இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டிம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன் செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-
1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு
2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி
3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்
4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ
5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்:-
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
தொடர்புக்கு:-
இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்திய எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? என்னும் தலைப்பிலமைந்த கருத்தரங்கம் மார்ச் 2, 2010, செவ்வாய்க்கிழமை மாலை 6-30 மணிக்கு நடந்தது.




[படம்: பேரா. மறைமலை, மணிவண்ணன், இராம.கி., இ. திருவள்ளுவன்]


கணிஞர் மணி மு.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
அவர் தமது தலைமையுரையில் பேசியவற்றுள் சில:-

“சீர்திருத்தம் என்பதை நாம் வெறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கருதிவிடக்கூடாது. பழமையைப் போற்றுவதாகவும் கருதிவிடக்கூடாது. காலத்தினால் மாற்றம் நிகழ்வது இயல்பே. ஆனால் அம்மாற்றம் படிப்படியாக, சிறிதுசிறிதாகவே ஏற்படும். தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளின் மாற்றநிலையைப் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

இப்போது சீர்திருத்தம் என்பவர்கள் உடனடியாக ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறார்கள். இம்மாற்றத்தினால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?

எழுத்துகள் குறைந்தால் கல்வி கற்கும் திறன் அதிகமாகும் என்னும் கூற்று உண்மையில்லை என்பதற்கு ஒரு சான்று கூறுகிறேன். தமிழ்நாட்டில் படிப்பறிவு 74%.தமிழைவிடக் குறியீடுகள் மிகுந்தும் தமிழில் இல்லாத கூட்டெழுத்துகள் நிறைந்தும் மொழி மலையாளம்.எனினும் தமிழ்நாட்டை விட அங்குப்படிப்பறிவு மிகுதி.(94%)

ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ள சீனம்,சப்பான் மொழியினரின் கல்வியறிவு சாலச் சிறந்துவிளங்கவில்லையா?எனவே பொய்யான தகவல்களையும் பொருந்தாத கூற்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுவிளங்கும் எழுத்துச்சீர்திருத்தக் கருத்துப்பரப்புரை ஏற்கத்தக்கதன்று.

தமிழ் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய மொழி எனக் கருதிவிடக்கூடாது.இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மாற்றம் - எழுத்தமைப்பில் - ஏற்படுமாயின் அயல்நாட்டுத்தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் வேறுபாடு தோன்றும். தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததைப்போல பல மொழிகள் மீண்டும் உருவாகும் சூழல் ஏற்படும்.

ஏனைய நாட்டுத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் என்ன கருதுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னரே இத்தகைய செயல்களைப் பற்றிய சிந்தனைக்குச் செல்லவேண்டும்.”

பொறியாளர் இராமகி கூறியவற்றுள் சில:-


இ,ஈ,உ,ஊகாரக் குறியீடுகளை மாற்றினால் சென்னைப் பல்கலைப் பேரகராதியின் 59% சொற்கள் மாற்றம் பெற நேரலாம். கல்பாக்கம் சீனிவாசன் புள்ளிவிவரங்களின் படி இ-கர ஈகார, உகர ஊகாரக் குறியீடுகள் தமிழில் 24% சொற்களில் உள்ளன. நான்கில் ஒரு சொல் மாறுவது என்பது மிகப் பெரிய மாற்றம்.

இளைய தலைமுறையினர் இம்மாற்றங்களால் இன்று அச்சிலிருக்கும் பல நூல்களைப் புரிந்துகொள்ளாது இடர்ப்படுவர். பழைய பதிப்புகள் படிப்பாரற்றுப் போகும். இப்பதிப்புகளில் 90%க்கு மறுபதிப்பு வாராமல் போகலாம்.

மேலும் இன்றைய குறியீடுகளால் தமிழைப் படிப்பதற்குத் துன்பமாகவுள்ளது என யாரேனும் முறைப்படி ஆராய்ந்தார்களா? இவர்கள் பள்ளிகளுக்குப் போய்க் கணக்கெடுத்து வந்தார்களா? எத்தகைய ஆய்வும் நிகழ்த்தாமல் இவர்களாக ஒரு முடிவுக்கு எப்படிவரலாம்?

சீன மொழியிலோ சப்பானிய மொழியிலோ ஆயிரக் கணக்கான குறியீடுகள் உள்ளன என்றாலும் அவர்களே பண்பாட்டுத் தொடர்ச்சி கருதி அவற்றை மாற்றுவது பற்றித் தயங்குகிறார்களே!" என்றார்.

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்.

“கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியம் எழுத்துகளின் வடிவங்களை விளக்குகிறது. அதன்பின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொல்காப்பியர் கால எழுத்து வடிவமுறை மாற்றம் பெறவில்லை என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. இதன் பின்னர் வந்த இலக்கண நூல்களும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழில் எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறவில்லை என்பது புலனாகிறது.

கல்வெட்டு எழுத்து ஒரு சுருக்கெழுத்துப் போன்று தொழில்நுணுக்கமொழியே. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துகள் மாற்றம் பெற்றதாகக் கூறல் தவறு.”

மூன்று உரையாளர்களும் மிகவும் நடுநிலையாக, யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசாமல், தகுந்த சான்றாதாரங்களுடன் உரை நிகழ்த்தியமை அவையோரின் கவனத்தை ஈர்த்தது.

துணைமுதல்வர் நூல்வெளியீட்டு விழாவையும் மீறி ஐம்பது பேர் கூட்டத்திற்கு வந்திருந்தமை மகிழ்வளித்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பரவலாக இனி இது போன்ற கூட்டங்கள் நடக்கவிருப்பதன் முன்னோடியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம்.


எழுத்தாக்கம்:-
மணி மு.மணிவண்ணன்