யூனிகோடு தமிழைச் சமஸ்கிருத மயமாக்கும் சதிநாசம்

...மிகப்பயங்கரமான மோசடி நாம் அனைவரும் இணையத்தில் பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருத மயமாக்கும் மோசடி... சதிநாசம்.. தமிழ்மொழிக் கொலை.. கொடூரம்..!!


சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.

யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது.

இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே காட்டுகிறது” என்று மகிழ்வார்கள் அல்லது மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக அரசு அங்கீகரித்தது என்பது கவனிக்கத்தக்கது. அண்மைய செம்மொழி மாநாட்டின் போதுதான் தமிழக அரசு அங்கீகரிப்பைவெளியிட்டது. ஆனால் அது முடிந்த 3 மாதங்களிலேயே யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும் முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற நிலையில் இருக்கின்றது கவலைப்பட வைக்கும் விதயமாகும்.

யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அக்டோபர் 2010.

அதற்குள் மறுப்பு போய்ச் சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி, Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள்இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி அழியத் தொடங்கும் அவல நிலைக்குத் தள்ளப்படும்.

மேலும் படிக்க:- http://pettagam.blogspot.com/2010/10/unicode.html

இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி.. நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான்...

உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும்.







  • நன்றி:- பெட்டகம் வலைப்பதிவு

கருத்துகள் இல்லை: